ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
கடந்த இரண்டு வாரங்களாக தலைநகர் டில்லியில் தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி போராடி வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு உரிய தீர்வு எட்டப்படாத நிலையில் இவர்களை நேற்று நடிர் சங்கம் சார்பில் விஷால், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துனர்.
இந்நிலையில் விவசாயிகளுக்காகவும், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், மத்திய அமைச்சர்கள் நிதின் கட்காரி மற்றும் அருண் ஜெட்லியை நடிகர்கள் விஷால், பிரகாஷ் ராஜ் ஆகியோர் சந்தித்து பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரகாஷ் ராஜ்... ‛‛விவசாயிகளின் பிரச்னைக்காகத்தான் நேற்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரியையும், இன்று அருண் ஜெட்லியையும் சந்தித்தோம். விவசாயிகளின் பிரச்னையை உடனடியாக கருத்தில் கொள்ள வேண்டும். இதை ஒரு மாநில விவசாயிகளின் பிரச்னையாக பார்க்காமல், ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளின் பிரச்னையாக பார்க்க வேண்டும் என்றார்.
நடிகர் விஷால் பேசுகையில், ‛‛விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கவே வந்தோம், இதை முக்கிய பிரச்னையாக கருத்தில் கொண்டு தீர்வு காண வேண்டும், இனி விவசாயிகள் தற்கொலை நடக்க கூடாது'' என்றார்.
மத்திய அமைச்சர் உடனான சந்திப்பின் போது விஷால், பிரகாஷ்ராஜ் மற்றும் இயக்குநர் பாண்டிராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.